Header Ads Widget

Responsive Advertisement

வைகாசி நிலவே அருள் மிகப் பெற்ற மரியே

 




 

 

என் இதய வாழ்வினிலே

உன் அன்பு பெருக

அமலமரி மைந்தர் எம்மில்

அருள் நிரம்பி வருக

சேயாக எமை எடுத்து

அருள் முத்தம் தருக -தாயே

உமை அன்றி வேறில்லை

அன்புதனில் சிறக்க

 

கரம் உண்டு, கலை இல்லை

நாவுண்டு, சுவையில்லை

பொருள் உண்டு விலை இல்லை

உன் அகம் இன்றி அருள் இல்லை- அமலமரியே

உன் அன்பின்றி இவ் உலகில்லை

 

பனையின் உயரம் கொண்டு

பாவமே உவகை என்று

வாழ்வுதனைத் தொலைத்தோம்

அம்மா என்று சொல்லி

பரிந்து பேசவிடுத்தோம் தூது

 

பார் நீண்ட புகழ் செய்த

பிள்ளையை கொடுத்து- சீர் செய்தீர்

எம் வாழ்வை- உம் மைந்தனை

கொலைக்களத்தில் கொடுத்து

 

கரம் பிடித்து நிதம் சேர்ப்பாய்

அருள் எடுத்து வைகாசி வளம் கொடுப்பாய்

அருள் கொண்ட 53 மணி சொன்ன

அருள் மிகப்பெற்ற உன்னை

கரம் குவித்து தொழுவோம் நாளும்….


Bro. Rubeshan CMF

Post a Comment

0 Comments